சமூக நீதி நாள் உறுதிமொழி

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 17.09.2025-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேற்படி உறுதிமொழியின்படி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன்.சுயமரியாதை, ஆளுமைத்திறனும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக்கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமூதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன். என்று சமூக நீதி நாள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை
Next Story

