ஆண்டிப்பட்டி காலனி மதுவால் வந்த வினை. வயிற்று வலியால் அவதிபட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை.
ஆண்டிப்பட்டி காலனி மதுவால் வந்த வினை. வயிற்று வலியால் அவதிபட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா ஆண்டிப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து மனைவி முத்துலட்சுமி வயது 50. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வயிற்று வலியால் கடந்த மூன்று வருடங்களாக அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த முத்துலட்சுமி செவ்வாய்க்கிழமை இரவு இரவு 10:30 மணியளவில் அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதித்தவர் அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் நேற்று உயிரிழந்தார். சம்பவம் குறித்து முத்துலட்சுமி கணவர் காளிமுத்து அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story




