வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர் கைது, கார் பறிமுதல் நகர காவல்துறையினர் நடவடிக்கை..

வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில்  திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர் கைது, கார் பறிமுதல் நகர காவல்துறையினர் நடவடிக்கை..
X
வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர் கைது, கார் பறிமுதல் நகர காவல்துறையினர் நடவடிக்கை..
வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர் கைது, கார் பறிமுதல் நகர காவல்துறையினர் நடவடிக்கை.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்பலால் நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை இவர் சொந்தமாக செம்மறி ஆடுகளை வளர்த்து வரும் நிலையில், கடந்த 14 ஆம் தேதி அஞ்சலை அதே பகுதியில் உள்ள வழக்கறிஞராக உள்ள சுல்தான் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலில் விட்டிருந்த போது ஒரு செம்மறி ஆடு காணாமல் போயியுள்ளது, அதனை தொடர்ந்து அஞ்சலை ஆடு காணாமல் போனது குறித்து இன்று அப்பகுதி மக்களிடையே கூறியுள்ளார், இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அஞ்சலை, ஆடுகளை மேய்ச்சலில் விட்டிருந்த இடத்தில், இருந்த சிசிடிவி காட்சிகளை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்த போது, அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான சுல்தான் தனது நண்பரான வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த திருமலை என்பவருடன் சேர்ந்து அஞ்சலையின் ஆட்டை காரில் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது, அதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சுல்தானை அவரது இல்லத்திலேயே சிறைபிடித்து இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சுல்தான் மற்றும் அவரது நண்பரான திருமலை கைது செய்து, ஆடுகளை கொள்ளையடிக்க பயன்படுத்திய சொகுசு காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.. அதனை தொடர்ந்து இருவரும் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அதிகளவில் ஆடு காணாமல் போய் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பலரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தனது இடத்தில் மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்த ஆடுகளை வழக்கறிஞர் தனது நண்பருடன் சேர்ந்து காரில் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
Next Story