உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி வாலிபர் பலி

X
மதுரை மாவட்டம் பேரையூர் காளப்பன்பட்டியில் வசிக்கும் ராஜ்குமார் மகன் கவுதம் (18) என்பவர் கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டியும்( 19) உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர்கள் இருவரும் நேற்று (செப் .17) மாலை வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் கல்லூரி விட்டு வீடு திரும்புவதற்காக காளப்பன்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி கவுதம் உயிரிழந்தார். அருண் பாண்டி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சேடப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

