பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்

X
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு திடீரென்று பலத்த மழை பெய்தது இந்நிலையில் திருப்போரூரை அடுத்த கரும்பாக்கம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை காரணமாக முழுமையாக நீரில் மூழ்கின . இதனால் விவசாயிகள் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆங்காங்கே மின்கம்பங்களும் சாய்ந்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. திடீரென பெய்த மழையின் காரணமாக திருப்போரூா் கரும்பாக்கம், செங்கல்பட்டை அடுத்த பாலூா் , வில்லிப்பாக்கம், பெரியஇரும்பேடு, விப்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல்பயிா்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினா். மழைநீரில் மூழ்கி நெல்பயிா் முழுமையாக வீணாகியுள்ளதை பாா்வையிட்டு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.
Next Story

