ஒசூர் சாந்தபுரம் ஏரியில் நிரம்பும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த சின்ன எலசகிரி பகுதியில் உள்ள சாந்தபுரம் ஏரியில்ஆண்டு முழுவதும் கழிவுநீர் கலந்துவருவதால் ஏரி ஆண்டுமுழுவதும் நிரம்பியுள்ளது. கழிவுநீர்க் காரணமாக அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. ஏரியிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அங்கு குடியிருப்போர் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் கழிவுநீரால் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ஏரியை தூய்மைப்படுத்தி, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும், தரைப்பாலத்தை உயர்நிலை பாலம அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

