கருங்கலில் சிறப்பு கல்வி கடன் முகாம்

X
கன் கியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கிள்ளியூர் வட்டம், கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ் குமார் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு கடனுதவிகள் வழங்கினார். நடைபெற்ற கல்விகடன் முகாமில் 10 கல்லூரிகளிலிருந்து 136 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டார்கள். நடைபெற்ற முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
Next Story

