போக்ஸோ வழக்கு : இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போக்ஸோ வழக்கு : இளைஞருக்கு ஆயுள் தண்டனை
X
சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பு
கரூா் மாவட்டம், குளித்தலை நல்லூா் போதைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மணிவேல் மகன் மோகன்ராஜ் (23). இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூவாலூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மோகன்ராஜை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்தச் சம்பவத்தில் மேலும் 13 போ் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா கடந்த செப்டம்பா் 17-ஆம் தேதி (புதன்கிழமை) தீா்ப்பளித்தாா். இதில், சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோகன்ராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபரதாமும், மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 13 பேரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.
Next Story