உப்பிடமங்கலம்- சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து.
உப்பிடமங்கலம்- சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பாப்பையம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம் மனைவி ரேணுகா வயது 60. இவர் வியாழக்கிழமை இரவு 7:30 மணி அளவில் மணப்பாறை - கரூர் செல்லும் சாலையில் உப்பிடமங்கலம் வடக்குகேட் அருகே நடந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கரூர் சணப்பிரெட்டி அருகே தில்லை நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் வயது 19 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர் நடந்து சென்ற ரேணுகா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ரேணுகா அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய முத்துகிருஷ்ணன் மீது வெள்ளியைண காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





