சிவா நகரில் வேகமாக சென்ற லாரி திடீரென பிரேக் இட்டதால் டூவீலர் மோதி விபத்து.

சிவா நகரில் வேகமாக சென்ற லாரி திடீரென பிரேக் இட்டதால் டூவீலர் மோதி விபத்து.
சிவா நகரில் வேகமாக சென்ற லாரி திடீரென பிரேக் இட்டதால் டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா நெரூர் வடபாகம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி வயது 70. இவர் திங்கள் கிழமை அன்று மாலை 6:45 மணி அளவில் கரூர்-நெரூர் சாலையில் அவரது டூவீலரில் சிவா நகர் அருகே சென்றபோது அருகிலுள்ள ரெங்கநாதன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் வயது 46 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற லாரி ரங்கசாமியை முந்தி சென்று திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால் ரங்கசாமியின் டூவீலர் ஜெயபிரகாஷ் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரங்கசாமி மகன் சிவசங்கர் வயது 41 என்பவர் அளித்த புகாரில் விபத்து ஏற்படும் வகையில் லாரியை ஒட்டிய ஜெயபிரகாஷ் மீது வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story