இறப்பிலும் இணைபிரியாத தம்பதியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மனைவி இறந்த சில மணி நேரங்களில் கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு நேதாஜி நகரில் குடியிருந்து வருபவர் தங்கராஜ் (86), தலைமை காவலராக இருந்து ஓய்வு பெற்றவர்.,இவரது மனைவி பவளக்கொடி(76) ஆகியோர் வசித்து வந்த நிலையில் நேற்று ( செப்.19) இரவு 12 மணி க்கு உடல்நலக் குறைவு காரணமாக மனைவி இறந்த நிலையில் இறந்த தூக்கம் தாங்காமல் தங்கராஜ் அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது., இவர்களுக்கு கணேசன் என்ற மகனும் வாணி தேவி, சாந்தி, வசந்த ராணி என மூன்று மகள்களும் உள்ள நிலையில் திருமணமாகி வசித்து வருகின்றனர் .,
Next Story