வேப்பம்பாளையம்- டூ வீலரில் வேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.
வேப்பம்பாளையம்- டூ வீலரில் வேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. கரூர் மாவட்டம் வெங்கமேடு பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 77. இவர் புதன்கிழமை அன்று தனது டூவீலரில் கரூர் - கோவை சாலையில் வேப்பம்பாளையம் அருகே சென்ற போது டூவீலரை வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஆறுமுகத்தின் மனைவி இந்திராணி வயது 55 என்பவர் அளித்த புகாரில் கரூர் மாநகர காவல் துறையினர் ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





