பரமத்தி வேலூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

X
Paramathi Velur King 24x7 |20 Sept 2025 7:15 PM ISTபரமத்தி வேலூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கலெக்டர் துர்கா மூர்த்தி, கே.எஸ்.மூர்த்தி பங்கேற்பு.
பரமத்தி வேலூர், செப்.20: வேலூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், மாவட்ட இளைஞர் அணிதுணை அமைப்பாளர்கள் பூக்கடை சுந்தர், நவலடி ராஜா ஆகியோர் முன்னிலை விகித்தனர். பரமத்தி வேலூர் பேரூர்செயலாளர் முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான கே.எஸ்.மூர்த்தி,கலெக்டர் துர்கா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் முகாமில் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து உடனடி தீர்வாக 19 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், மருத்துவக் காப்பீட்டு அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை, வருமானச் சான்று, முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், பிறப்பிடச் சான்று, சொத்துவரி மற்றும் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். முகாமில் பரமத்தி வேலூர் தாசில்தார் கோவிந்தசாமி. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கருணாநிதி,மாவட்ட வழக்கறிஞர்கள் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், பரமத்தி வேலூர் பேரூர் அவைத் தலைவர் மதியழகன், மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்க்கான ஏற்பாடுகளை பேரூராட்சி சுகாதார அலுவலர் செல்வக்குமார் தலைமையில் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
