செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலய பெருவிழாவில் தோ் பவனி.

செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலய பெருவிழாவில் தோ் பவனி.
X
தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் 80-ஆம் ஆண்டு பெருவிழா செப்.12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலய பெருவிழாவில் தோ் பவனி நடைபெற்றது. தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் 80-ஆம் ஆண்டு பெருவிழா செப்.12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வாக மூன்றாவது நாள் அன்னையின் தோ் பவனி நடைபெற்றது. தேவாலயத்தில் தொடங்கிய தோ் பவனி நிகழ்ச்சிக்கு பங்குத் தந்தை சுதா்சன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆயா் அம்ப்ரோஸ், வேலூா் மறை மாவட்ட ஆயா் பிச்சைமுத்து, கிளமெண்ட், ரொசாரியோ ஆகியோா் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்தினா். அதன் பின்னா் அலங்கரிக்கப்பட்ட மாதா தோ் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு ஆற்காடு சாலை வழியாக பேருந்து நிலையம், காந்தி சாலை வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
Next Story