சத்தியமூர்த்தி நகர்- குடும்ப தகராறு காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை.

சத்தியமூர்த்தி நகர்- குடும்ப தகராறு காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை.
சத்தியமூர்த்தி நகர்- குடும்ப தகராறு காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகா எண் புதூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி வயது 46 இவரது மகள் யுவராணி வயது 25. இவர்கடந்த ஐந்தரை வருடங்களுக்கு முன்பு கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கரை வயதில் ஜெய்விந்த் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் யுவராணி- கார்த்திக் இடையில் அண்மைக்காலமாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:15 மணியளவில் மீண்டும் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த யுவராணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த யுவராணியின் தந்தை முத்துச்சாமி அளித்த புகாரில் வெங்கமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story