செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை

X
செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கும் கனமழை.! செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர், எல்லையம்மன் கோவில், இடைக்கழிநாடு, வென்னாங்கப்பட்டு சூனாம்பேடு பவுஞ்சூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கும் கனமழை.தமிழகத்தில் காஞ்சிபுரம், நீலகிரி,செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் செய்யூர் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது.
Next Story

