கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த இளைஞர் கைது

X
திண்டுக்கல்லை சேர்ந்த ராமு என்பவர் மேட்டுப்பட்டி - மொட்டணம்பட்டி ரோடு ரயில்வே கேட் அருகே நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த சேசுராஜ் மகன் சார்லி(40) என்பவர் உடைந்த பீர் பாட்டிலை கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் இருந்தால் பணத்தை திருடி சென்றதாக அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சாரலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

