தொழில்நுட்ப வகுப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர்கள்

தொழில்நுட்ப வகுப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர்கள்
X
தொழில்நுட்ப வகுப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-2, வார்டு-17க்குட்பட்ட பல்லாவரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.92 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகர் தொழில்நுட்ப வகுப்பறைகளை (Smart Class Room) அமைச்சர் கே.என். நேரு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தானர். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மாண்புமிகு மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப.,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சினேகா, இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர்கள், நகர மன்றத் தலைவர்கள், நகர மன்ற துணைத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story