சிங்காரப்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அடுத்துள்ள நாய்க்கனூர் பகுதியை சேர்ந்தவர் திருமால் (வ33) கூலித்தொழிலாளியான. இவருக்கு நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பல இடங்களில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த திருமால் சம்பவம் அன்று விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை மற்றும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் திருமால் உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

