குற்றாலத்தில் காங்கிரஸ் சாா்பில் கையொப்ப இயக்கம்

X
தென்காசி மாவட்டம், குற்றாலம் தெட்சண மாற நாடாா் சங்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசையும், தோ்தல் ஆணையத்தையும் கண்டித்து கையொப்ப இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில செயலா் ராம் மோகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆலங்குளம் செல்வராஜ், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏ கே.ரவி அருணன், முன்னாள் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் எஸ்.கே.டி.பி.காமராஜ், கொடிக்குறிச்சி முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் ராபா்ட் புரூஸ் எம்.பி., கையொப்ப இயக்கத்தினை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் சங்கரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story

