கரூர்- திமுக பொதுக்கூட்டத்தில் கட்சியினரை ஒருமையில் பேசிய திருச்சி சிவா

கரூர்- திமுக பொதுக்கூட்டத்தில் கட்சியினரை ஒருமையில் பேசிய திருச்சி சிவா
கரூர்- திமுக பொதுக்கூட்டத்தில் கட்சியினரை ஒருமையில் பேசிய திருச்சி சிவா கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் திமுக சார்பில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் சனிக்கிழமை இரவு "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்" என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்ற உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வந்த பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செந்தில் பாலாஜி கூட்டத்திற்கு தாமதமாக மேடைக்கு ஏறி வந்த போது பொதுமக்கள் அனைவரும் செந்தில் பாலாஜியை பார்த்தனர். அப்போது மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக எழுந்தனர் அப்போது திருச்சி சிவா பேசுவதை நிறுத்தி விட்டு கோபமடைந்தார். யோவ் யாரா இருந்தா என்ன அவர் பாட்டுக்க வராரு நீங்கள் ஏன் அங்கு பார்க்கிறீர்கள் நான் அடி வயிற்றிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என கோபமாக கூறினார். அப்போது மேடைக்கு வந்த செந்தில் பாலாஜி சால்வை அணிவித்து இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து திருச்சி சிவா பேச ஆரம்பித்தபோது, திமுக தொண்டர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்றனர். அவர்களைப் பார்த்து உடன் கோபம் அடைந்த அவர் 'உக்காரியா' என ஒருமையில் ஆவேசத்துடன் கூறினார்.இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story