கிருஷ்ணகிரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார், தலைமையில் நேற்று செப்-22 நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம், பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில்உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, துணை ஆட்சியர் (பயிற்சி) க்ரிதி காம்னா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சா.தனஞ்செயன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

