மங்கனூரில் மணல் கடத்திய நபர் தப்பி ஓட்டம்

X
கந்தர்வகோட்டை அடுத்த மங்கனூர் ஆர்ச் அருகே, அடையாளம் தெரியாத நபர்கள் டிப்பர் லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து புதுக்கோட்டை ஏடி மைன்ஸ் அளித்த தகவலின் படி, அவ்விடத்திற்கு வந்த போலீசாரை கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி சென்றனர். இதனை அடுத்து மணல் கடத்திய டிப்பர் லாரியை 3 யூனிட் மணலுடன் கந்தர்வகோட்டை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

