கேர் நகரில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.பெண் உள்பட இருவர் படுகாயம்.
கேர் நகரில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.பெண் உள்பட இருவர் படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வெங்கட்ராம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த பரமசிவத்தின் மனைவி கமலம் வயது 50. இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:30- மணி அளவில் பள்ளப்பட்டி - கரூர் செல்லும் சாலையில் டூவீலரில் வேலம்பாடி கேர் நகர் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர் திசையில் அருகில் உள்ள பாப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் வயது 22 என்பவர் ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்த நவீன் வயது 19 என்பவரை ஏற்றிக்கொண்டு மற்றொரு டூவீலரில் எதிர் திசையில் வேகமாக வந்து கமலம் ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கமலம் மற்றும் நவீன் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் இருவரையும் மீட்டு அரவக்குறிச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கமலம் அளித்த புகாரில் விபத்து ஏற்படும் வகையில் டூ வீலரை ஒட்டிய அரவிந்த் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story




