புதிய கான்கிரீட் சிமெண்ட் சாலை சிறப்பு நிகழ்ச்சி க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!

X
பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சிமெண்ட் சாலை சிறப்பு நிகழ்ச்சி க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியம், பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கனிம வள நிதியில் மூலம் ரூபாய் 36 லட்சம் மதிப்பிலான 600 மீட்டர் தூரம் கொண்ட சிமெண்ட் காங்கிரட் சாலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரிசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், கோகுலகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய காங்கிரட் சிமெண்ட் சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வசந்தா, ஒன்றிய கவுன்சிலர்கள் பார்த்தசாரதி, பொன்மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

