வெங்கடாபுரம் தெருவில் மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு.
வெங்கடாபுரம் தெருவில் மயங்கி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் புலியூர் வெங்கடாபுரம் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி வயது 76 இவர் முன்னாள் ராணுவ வீரர். கடந்த ஒரு வருட காலமாகவே உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்த முத்துசாமியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரோஜா வயது 65 என்பவர் அளித்த புகாரில் பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





