கணபதி பாளையத்தில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

கணபதி பாளையத்தில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கணபதி பாளையத்தில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் தாந்தோணி மலை அன்பு நகர் அருகே உள்ள வடக்கு கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால் வயது 44 இவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி அளவில் அன்பு நகர் - கணபதிபாளையம் சாலையில் நடந்து சென்றார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் வயது 24 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ராயல் என்ஃபீல்டு டூ வீலர் நடந்து சென்ற கோபால் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து கோபால் அளித்த புகாரில் தாந்தோணிமலை காவல்துறையினர் டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிலம்பரசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story