உங்களுடன் ஸ்டாலின் திட்ட பத்தாவது கட்ட முகாம் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆணையாளர்வாசுதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட பத்தாவது கட்ட முகாம் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆணையாளர்வாசுதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
X
திருச்செங்கோடு நகராட்சி பகுதியை சேர்ந்த 25, 27, 33 வார்டு களுக்கான 10 வது கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கவராநாயுடு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர்சரவணன் ஆகியோர் துவக்கி வைத்து உடன் தீர்த்து வைக்கப்பட்ட மனுக்களின் உத்தரவை வழங்கினர்
அரசின் திட்டங்களில் பயன்பெற விரும்புவர்கள் அரசு அலுவலகங்களை நாடி சென்று அலைய வேண்டிய நிலையை மாற்றி அரசின் 13 துறைகளை சார்ந்த 46 பணிகளில் பயன் பெற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. அதன் படி திருச்செங் கோடு நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் 3 வார்டுக்கு ஒரு முகாம் என 11 முகாம்கள் நடத்த திட்டமிடப் பட்டு இது வரை 9 முகாம்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்று25,27, 33 வது வார்டுகளுக்கான 10 வது முகாம் CHB காலனியில் உள்ள கவரா நாயுடு மண்டபத்தில் நடந்தது. முகாமை திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன், அண்ணாமலை, சுரேஷ்குமார் மற்றும் செல்லம்மாள் தேவராஜன், சிநேகா ஹரிகரன், திவ்யா வெங்கடேஸ்வரன் செல்வி ராஜவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பிக்க பெண்கள் பலரும் மனு கொடுத்தனர். முகாமில் 2 பெண் குழந்தைகளுக்கான நிதி டெபாசிட் பத்திரம் ராஜலிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்த பிரப மேகலா என்பவர்களுக்கு பெண் குழந்தைகள் உள்ளிட்ட 2 பேருக்கும் மின் இணைப்பு பெயர் மாற்ற உத்தரவு ஒருவருக்கும் உடனடியாக வழங்கப் பட்டது
Next Story