தாந்தோணி மலை டூவீலர்-சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

தாந்தோணி மலை டூவீலர்-சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
தாந்தோணி மலை டூவீலர்-சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் தாந்தோணி மலை சத்யமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் வயது 21, இவர் திங்கட்கிழமை மதியம் 3 மணி அளவில் தான்தோணி மலை - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் தாந்தோணி மலை மயானம் அருகே சென்றபோது எதிர் திசையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 40 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம் நவீன் குமார் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் பலத்த காயம் அடைந்த நவீன் குமாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த நவீன் குமாரின் தந்தை சுப்பிரமணியன் வயது 53 என்பவர் அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய சரவணன் மீது தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story