கோவை பூமார்க்கெட்டில் உடை குறித்த வாக்குவாதம்: இருதரப்பும் காவல் துறையில் புகார் !

X
கோவை ஆர்எஸ்புரம் அருகிலுள்ள பூமார்க்கெட்டில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்திருந்த சட்டக்கல்லூரி மாணவி ஜனனி மற்றும் ஒரு மலர் கடை உரிமையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோவை முழுவதும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் இந்த மார்க்கெட்டில், நேற்று முன்தினம் மலர் வாங்க வந்த ஜனனி ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்திருந்ததை குற்றம் கூறி, ஒரு கடை உரிமையாளர் “இப்படி உடை அணிந்து வரக்கூடாது” என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக ஜனனி, “உடையில்தான் பிரச்னை இல்லை, உங்கள் பார்வையில்தான் பிரச்னை” என பதிலளித்தார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோ பதிவு செய்யும் போது, சிலர் தடுத்ததுடன், ஜனனியை மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனனி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதே நேரத்தில், ஜனனி மற்றும் அவரது நண்பர் மீது சில பூ வியாபாரிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Next Story

