ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரி பகுதியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நட்டு வைப்பு..

ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரி பகுதியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நட்டு வைப்பு..
X
ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரி பகுதியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நட்டு வைப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வனத்துறை சார்பில் கோனேரிப்பட்டி ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை தொடர்ந்து நாமக்கல் வனக்கோட்டம், ராசிபுரம் வனச்சரகத்திற்குட்பட்ட, ராசிபுரம் நகராட்சி பகுதி, கோனேரிப்பட்டி ஏரி, லொயோலா கல்லூரியில் உள்ளிட்ட பகுதிகளில் 17 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட வன அலுவலர் மாதவி ஆதவ் அறிவுறுத்தல் பேரில், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் இந்த மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படுகின்றன. இதனையடுத்து ராசிபுரம் வனச்சரக அலுவலர் எம்.சத்யா தலைமையில், கோனேரிப்பட்டி ஏரியை சுற்றி நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதே போல் ஆயில்பட்டி லொயோலா கல்லூரி வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் நாவல் மரக்கன்றுகள் உள்ளிட்ட பலவகை பூமரக்கன்றுகளும் நடப்பட்டன. இதில் ராசிபுரம் வனவர் எம்.பி.தீபக், வனகாப்பாளர்கள் சுரேஷ், பாபு, பூவசரன், முரளிதரன், லொயோலா கல்லூரி முதல்வர் ஜோஸ்பின் டெய்சி, பேராசிரியர் வெஸ்லி உள்ளிட்டோர் பங்கேற்று மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
Next Story