தாராபுரம் அருகே கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளி கைது

தாராபுரம் அருகே கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளி கைது
X
தாராபுரம் அருகே கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளி தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
தாராபுரம் மதுவிலக்கு, அமலாக்க பிரிவு போலீசார் செங்கப்பள்ளி அருகே , வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சப்னா பைது (வயது 52) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர், செங்கப்பள்ளி அருகே பல்லகவுண்டம் பாளையம் பகுதி கிராமத்தில் தங்கி, கஞ்சா விற்றதாக போலீசார் தெரிவித்தனர்
Next Story