மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

X
வெள்ளகோவில் சேனாபதிபாளையத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 40). இவர், நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணமான முதல் நாளிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன்பின்னர் தொழிலை சரியாக கவனிக்காமல் இளவரசன் இருந்து வந்தார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த இளவரசன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

