வாணியம்பாடியில் தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

வாணியம்பாடியில் தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.
X
வாணியம்பாடியில் தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுனராக வேலை செய்யும் விக்னேஷ்குமார் இவரது மனைவி கிருத்திகா இவர்களது ஒன்றரை வயது மகன் பூமீஸ் என்ற குழந்தைக்கு இந்திரா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் நடைபெற்ற முகாமில் நேற்று காலை 11 மணிக்கு தடுப்பூச்சி போடப்பட்டதாகவும், பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. பின்னர் குழந்தையை உறங்க வைத்த நிலையில் குழந்தை இன்று அதிகாலை எலாததால் இதனால் பதறிப்போன பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையின் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர் அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு எடுத்துச் சென்ற நிலையில் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் அதன் அடிப்படையில் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வாணியம்பாடியில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை வரை சுமார் 70 கிலோ மீட்டர் ஆம்புலன்சை துரத்தி வந்த உறவினர்கள் அடுக்கம்பாறை பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்து குழந்தையின் உடலை கேட்டும், தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக கூறியும் இதற்கு உரிய நீதி வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட மருத்துவத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை எதனால் இறந்தது என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
Next Story