சூளகிரி அருகே சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு பதிவு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த 21-ஆம் தேதி திடீர் என்று மாயமானார். இது பற்றிபெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை காமச்சந்திரம் அருகே மூக்கனஅள்ளியை சேர்ந்த சசிதரன் (32) என்பவர் தனது மகளை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடத்தி விட்டதாக கூறிய உள்ளனர். அதன் பேரில் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசார் கடத்தல் பிரிவின் கீழ் சசிதரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story

