போக்குவரத்து விதிமீறல்: டிராக்டர்கள் பறிமுதல்

போக்குவரத்து விதிமீறல்: டிராக்டர்கள் பறிமுதல்
X
கோவில்பட்டியில் விதிமீறி இயங்கியதாக டிராக்டர்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி ஆகியோர் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அதில், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 3 டிராக்டர்கள் மற்றும் சுமை வாகனத்தை முறையான அனுமதி, ஆவணங்கள் இன்றி கட்டுமான பணிகளுக்hகன கற்கள், ஜல்லிகள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story