பாமக தலைவராக அன்புமணியை மக்கள் நம்ப தயாராகி விட்டார்கள் என அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பேட்டி...*

X
பாமக தலைவராக அன்புமணியை மக்கள் நம்ப தயாராகி விட்டார்கள் என அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பேட்டி... விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வரும் 29ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் .அதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் பாமக மாநிலப் பொருளாளர் கவிஞர் திலகபாமா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திலகபாமா, வரும் 29ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி சிவகாசியில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதில் திரளான மக்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.அன்புமணியை தலைவராக நீட்டித்த தேர்தல் ஆணையத்தின் ஆவணம் தவறானது என கூறும் ஜி.கே.மணி அதற்கான ஆதாரமாக ஆவணத்தை வெளியிட வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது, அந்த கடிதத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம் . அதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்யட்டும். பாமக என்பது ஒன்றுதான் எனவும், பாமக தலைவராக அன்புமணியை மக்கள் நம்ப தயாராகி விட்டார்கள் என தெரிவித்தார். மருத்துவர் ராமதாஸ் கூறிவரும் கருத்துக்களை பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் செல்வம் தென்காசி மாவட்ட செயலாளர் சீதாராமன், இசக்கிமுத்து ,சிவகாசி தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சக்திவேல், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர் பேட்டி: கவிஞர் திலகபாமா - மாநில பொருளாளர்
Next Story

