செங்கல்பட்டில் காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

X
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட நிதியில் 2.85 கோடி மதிப்பீட்டில் புதிய 62 கடைகள் கொண்ட காய்கறி மார்கெட் அமைப்பதற்காக இன்று காலை அடிக்கல் நாட்டு விழாவில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன்,நகர்மன்ற துணைத்தலைவர் அன்புசெல்வன், நகர கழக செயலாளர் நரேந்திரன், நகராட்சி ஆணையர் ஆண்டவன், நகர்மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி,மாணவர் அணி,மகளிர் அணி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள்,வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
Next Story

