பெரியமஞ்சுவெளியில் தாயாருடன் டூவீலரில் சென்றபோது மயில் திடீரென சாலையை கடந்ததால் விபத்து.

பெரியமஞ்சுவெளியில் தாயாருடன் டூவீலரில் சென்றபோது மயில் திடீரென சாலையை கடந்ததால் விபத்து.
பெரியமஞ்சுவெளியில் தாயாருடன் டூவீலரில் சென்றபோது மயில் திடீரென சாலையை கடந்ததால் விபத்து. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா பெரிய மஞ்சுவலி மேற்கு தெருவை சேர்ந்தவர் துரையன் மனைவி அங்கு லட்சுமி வயது 53. இவரது மகன் ராஜேஷ் வயது 31. இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை அன்று பெரியமஞ்சுவெளி -ஜங்கால்பட்டி சாலையில் டூவீலரில் சென்றனர். இவர்களது வாகனம் அப்பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே சென்றபோது திடீரென மயில் ஒன்று சாலையை கடந்ததால் ராஜேஷ் தனது டூ வீலரை திடீரென பிரேக்கிட்டதால் இருவரும் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது . இதில் அங்கு லட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், சம்பவம் தொடர்பாக அங்கு லட்சுமி அளித்த புகாரில் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜேஷ் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்.
Next Story