துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு

X
தூத்துக்குடி வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை சுமார் 280க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தம் அதே போன்று நாட்டுப் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதி வங்க கடலில் ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது மேலும் கடல் பகுதியில் சுமார் 60 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இன்று விசைப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை இதன் காரணமாக விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 280 க்கு மேற்பட்ட விசைபடகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதேபோன்று நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதன் காரணமாக சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் மாவட்டம் முழுவதும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
Next Story

