திருக்காம்புலியூரில் மது போதையில் விஷம்குடித்த வாலிபர் உயிரிழப்பு.
திருக்காம்புலியூரில் மது போதையில் விஷம்குடித்த வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா கள்ளபள்ளி அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் வயது 28. இவர் வியாழக்கிழமை இரவு 7:45 மணி அளவில் திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மது போதையில் இருந்த போது பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஐயப்பனின் தாயார் ஈஸ்வரி வயது 42 என்பவர் அளித்த புகாரில் ஐயப்பன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





