குருணைகுளத்து பட்டியில் டூவீலரில் வேகமாக சென்றதால் மற்றொரு டூவீலர் மீது மோதி ஒருவர் படுகாயம்.

குருணைகுளத்து பட்டியில் டூவீலரில் வேகமாக சென்றதால் மற்றொரு டூவீலர் மீது மோதி ஒருவர் படுகாயம்.
குருணைகுளத்து பட்டியில் டூவீலரில் வேகமாக சென்றதால் மற்றொரு டூவீலர் மீது மோதி ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா சாலிகரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 52. இவர் செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் பாளையம் - தோகைமலை சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் குருணை குளத்துப்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் அதே சாலையில் சென்ற மற்றொரு டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பழனிச்சாமியின் மகன் மணிகண்டன் வயது 26 என்பவர் அளித்த புகாரில் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர் டூவீலரை அஜாக்கிரையாக ஓட்டிய பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story