கோவை அண்ணாநகருக்கு பேருந்து சேவை கோரி மனு!

X
கோவை தொண்டாமுத்தூர் அண்ணாநகரில் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. கெம்பனூருக்கு தினம் 17 பேருந்துகள் செல்லும் நிலையில், அண்ணாநகருக்கு 7 மட்டுமே செல்கின்றன. சம சேவை கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்தனர். வனவிலங்கு ஆபத்து உள்ள பாதையில் மாணவர்கள், பணியாளர்கள் பயணிக்க வேண்டிய நிலை தொடர்வதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story

