ரயில்வே உதிரிபாகங்கள் திருட்டு – ஏழு பேர் கைது !

X
கோவை ரெயில்வே யார்டில் ஆபரேஷன் யாத்ரி சுரக்ஷா சிறப்பு சோதனையில், ரயில் பெட்டிகளின் உதிரிபாகங்களை திருடிய கும்பலை தென்னக ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இலங்கோவன், ராதாகிருஷ்ணன், கோகுல்பிரசாத், அருண்பாண்டி, ஜார்ஜ் புஷ், வெற்றிவேல் ஆகிய ஆறு பேரிடம் இருந்து 745 கிலோ ரயில்வே உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கோவை சூலூரில் உள்ள முருகன் மெட்டல்ஸ் கடையில் 405 கிலோ ரயில்வே பொருட்களை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து உரிமையாளர் பாலமுருகனும் கைது செய்யப்பட்டார். மொத்தம் ரூ.42,000 மதிப்பிலான ரயில்வே சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. கைதாகிய ஏழு பேரும் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story

