தசரா விடுமுறை : தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

X
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீன்பாடு அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர். டீசல், மீனவர்கள் சம்பளம கொடுக்க முடியாமல் திணறி வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் செப்.25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் நேற்று 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை தினம் என்பதால் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில், தசரா பண்டிகையை முன்னிட்டு வருகிற 2ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வருகிற 3ம் தேதி முதல் வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

