கங்கைகொண்டம் சோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம முற்றுகை.

கங்கைகொண்டம் சோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம முற்றுகை.
X
கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம இளைஞர்கள் ஒன்று கூடி கட்டிடப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பாக முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஏற்கனவே இருந்த இடத்திலேயே ரேஷன் கடை கட்டாவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர், செப்.29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் புதிதாக ரேஷன் கடை கட்டும் பணிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் எம்.எல் ஏ கண்ணன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அந்தப் பணிகளானது தற்போது பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிட பணிகள் கட்டுவதாகவும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை வலியுறுத்தியும், 42 அடி பொதுப் பாதை தற்பொழுது ரேஷன் கடை கட்டுவதற்காக ஆயத்த பணி நடைபெறும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டால் மேலும் தனிநபர் ஆக்கிரமப்புகளும் நடக்கும் இதனால் பொதுப்பாதை குறுகி அங்கே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அன்னாபிஷேக மண்டபத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும், மேலும் பொதுமக்கள் பாதசாரிகள் வாகனங்கள் செல்ல முடியாத நெருக்கடி ஏற்படும் எனக் கூறி அக்கிராம இளைஞர்கள் ஒன்று கூடி கட்டிட பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பாக முற்றுகையிட்டு கோசமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அரசே சட்ட விரோதமாக பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் எனவே கிராம பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது நடைபெறும் கட்டிட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த பழைய இடத்திலேயே ரேஷன் கடை கட்டிடப் பணிகளை கட்ட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இளைஞர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story