தேன்கனிக்கோட்டை அருகே அடையாளம் வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு.

தேன்கனிக்கோட்டை அருகே அடையாளம் வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு.
X
தேன்கனிக்கோட்டை அருகே அடையாளம் வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பென்சிபள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50) கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மகள் ரேணுகா (23) மருமகன் சகாதேவன் (25) உறவினர் சிவருத்திரன் (13) 4 பேரும் ஒரே டூவீலரில் தேன்கனிக்கோட்டைக்கு வந்த போது ஓசட்டி ஏரி அருகில் செல்லும் போது எதிரே வந்த அடையாளம் தெரியதா மற்றேரு டூவீலரில் மோதியதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் பற்றி விசாரணை நடத் வருகிறார்கள்.
Next Story