மின் கம்பியை பிடித்ததால் பாதி எரிந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

மின் கம்பியை பிடித்ததால் பாதி எரிந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
X
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மின் கம்பியை பிடித்ததால் பாதி எரிந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 1-வது பிளாட் பாரத்தில் அடையாளம் தெரியாத நபர் ரயில் மீது ஏறி மின் கம்பியை பிடித்ததால் பாதி எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாதிக்கப்பட்டவரை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை அங்கிருந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story