கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது

X
கரூர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (38), தவெக மாங்காடு உறுப்பினர் சிவனேசன் (36), அதே கட்சியின் ஆவடி வட்டச் செயலாளர் சரத்குமார் (32) ஆகிய 3 பேரை சென்னை போலீஸார் கைது செய்தனர். இதன் நீட்சியாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். முதல்கட்ட தகவலில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதற்காக ஃபெலிக்ஸ் கைதாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
Next Story

