களியக்காவிளை : வக்கீல் குமஸ்தா மீது தாக்குதல்

களியக்காவிளை : வக்கீல் குமஸ்தா மீது தாக்குதல்
X
3 பேர் மீது வழக்கு
குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ஜோய்சன் (50). இவர் வக்கீல் குமஸ்தாக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அந்தோணி (54). ஆட்டோ டிரைவர். அந்தோணி அடிக்கடி குடித்துவிட்டு ஜோய்சனிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ தினம் அந்தோணி அவரது மனைவி செல்வராணி (50), மகன் அனிஷ் (33) ஆகியோர் ஜோய்சன் வீட்டில் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகள் பேசி, தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜோய்சனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்தவரை குழித்துறை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story